15 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமயிலாப்பூர்
                              - பாற்காட்டும்
ஆர்த்திபெற்ற மாதுமயி லாய்ப்பூசித் தார்மயிலைக்
கீர்த்தி பெற்ற நல்வேத கீதமே -

வேதங்களை ஏற்ற இறக்கங்களுடன் உரக்கச் சொல்லும்போது சங்கீதமாய் ஒலிக்கும்.
இறைவனின் இடப்பாகம் பெற்ற மனநிறைவோடு, மயில் வடிவு கொண்டு உமையம்மையார்
வழிபட்டார். இங்கு இறைவனின் பெயர் கபாலீஸ்வரர். இறைவி பெயர் கற்பகவல்லித் தாயார்.

உமையம்மை மயிலாய் வழிபட்டதால் மயிலாப்பூர்.  நொச்சி எனப்படும் பூவகையுள் ஒன்று மயிலைப்பூ.
மயிலைப்பூ நிறைய இருந்ததால் மயிலாப்பூர். சென்னையில் உள்ளது. திருஞானசம்பந்தர் 'மட்டிட்ட' என்ற பதிகம் பாடி இறந்த பூம்பாவையின் எலும்பைப் பெண்ணாகச் செய்தார்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா, 263
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

No comments:

Post a Comment