27 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திரு அனேகதங்காவதம்
                                         - நீடுபவம்
தங்கா தவனேக தங்கா பதஞ்சேர்ந்த
நங்காத லான நயப்புணர்வே -

'அனேகதங்கா பதம் சேர்ந்தவர்க்கு நீடுபவம் தங்காது' - நம் காதலனனான விரும்பத்தக்க ஞானமயமானவன் சிவபெருமான். அவன் வீற்றிருக்கும் 'அனேகதங்காவதத்தை' நினைந்து வழிபட்டால்
பிறவிப் பிணி நீங்கிவிடும்.
ஹரித்துவாரத்திலிருந்து கேதார்நாத் செல்லும் வழியிலுள்ள கெளரிகுண்டம் என்ற இடமே இத்தலம். உமையம்மை தவம் செய்த தலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

No comments:

Post a Comment