20 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்


அச்சிறு பாக்கம்
                                                - துன்னுபொழில்
அம்மதுரத் தேன்பொழியும் அச்சிறுபாக் கத்துலகர்
தம்மதநீக் குஞ்ஞான சம்மதமே -

அச்சிறுப்பாக்கத்தில் தேன்மலர்ச் சோலைகள் உள்ளன. மலர்களிலிருந்து தேன் பொழிகிறதாம்! அப்படியானால் எவ்வளவு தேன் இருந்திருக்க வேண்டும்! இவ்வூர் மக்கள் அவரவர் பின்பற்றி வந்த மதங்களிலிருந்து விலகி பரசிவஞான வழியை ஏற்றுக் கொள்ளும்படியாகச் செய்த சிவபெருமானே, வந்தனங்கள்.

அச்சரப்பாக்கம் என்று வழங்கப்படும் இவ்வூர் சென்னை விழுப்புரம் சாலையில் உள்ளது. விநாயகரை வணங்காது திரிபுரம் எரிக்கச் சென்ற சிவபெருமானின் தேர் அச்சு முறிந்த இடம் ஆதலால் அச்சிறுப்பாக்கம். ( அச்சு+ இறு+ பாக்கம்)

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி  

No comments:

Post a Comment