19 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கழுக்குன்றம்
                                - நன்னெறியோர்
துன்னுநெறிக் கோர்துணையாத் தூய்கழுக் குன்றினிடை
முன்னும் அறிவானந்த மூர்த்தமே -

நல்ல நெறியில்  வாழுகின்ற  சான்றோர்களின் உள்ளமானது, அதிலிருந்து நீங்காமல் அவர்களைக் காத்து, துணையாய் விளங்குவது திருக்கழுகுன்றம். இங்கு சத், சித், ஆனந்தம் ஆகிய, உண்மை ,அறிவு, ஆனந்தம் மூன்றும் தனித்தனியாகவும், கலந்தும் நிற்பவர் சிவபெருமான் ஆவார்.

இவ்வூர் செங்கல்பட்டிலிருந்து 14 கி.மீ தூரத்தில் உள்ளது. மலைமேல் உள்ள கோயில் மலைக் கோயில் எனவும், ஊருக்குள் உள்ள கோயில் தாழக் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.ஒவ்வொரு நாளும் உச்சிப் பொழுதில் கழுகுகள் வந்து உணவு பெற்றுச் செல்கின்றன. மலை வலம் வந்தால் உடற்பிணி நீங்கும் எனக் கருதப்படுகிறது. இது மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். மணிவாசகருக்கு  இறைவன் குருவடிவாகக் காட்சிதந்த தலம். இறைவன் -வேதகிரீசுரர், இறைவி - பெண்ணின் நல்லாள்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி



No comments:

Post a Comment