7 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவெண்பாக்கம்
                                                                       - தேசூரன்
கண்பார்க்க வேண்டுமெனக் கண்டூன்று கோல்கொடுத்த
வெண்பாக்கத் தன்பர்பெறும் வீறாப்பே -

தேசு ஊரன் - நம்பியாரூரர் எனப் பெயர் பெற்ற சுந்தரர் கண் பார்வை இழந்த போது அவருக்கு உதவியாக ஒரு ஊன்றுகோலைக் கொடுத்து அருள் புரிந்த திருவெண்பாக்கத்து சிவபெருமானே,
வணங்குகிறேன்.
சுந்தரர் ஒற்றியூரில் தங்கியிருந்த போது சங்கிலியாரை மலர் மண்டபத்தில் கண்டு காதல் கொண்டார். அவரை விட்டுப் பிரியேன் என இறைவன் முன்னிலையில் சபதம் செய்து மணம் செய்து கொண்டார்.
ஆனால் சிறிது காலம் சென்ற பின் ஆரூர் செல்ல மிகுந்த ஆவல் கொண்டு ஒற்றியூரை விட்டு நீங்கியவுடன் கண்பார்வை இழந்தார். அப்போது இவ்வூர் வந்து இறைவனைத் துதித்துப் பாட, சிவபெருமான் அவருக்கு ஊன்று கோல் தந்து அருளிய தலம் திருவெண்பாக்கம்.

'ஏராரும் பொழில் நிலவு வெண்பாக்கம் இடங்கொண்ட காராரும் மிடற்றான்,' எனப் பாடுகிறார் சுந்தரர்.

இக்கோயில் நீர் நிலைக்குள் மூழ்கிவிட்டது. தற்போது புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்  -அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment