26 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

இந்திர நீலப்பருப்பதம்
                                      -போகிமுதல்
பாடியுற்ற நீலப் பருப்பதத்தில் நல்லோர்கள்
தேடிவைத்த தெய்வத் திலகமே -

வடநாட்டுத்தலங்கள் ஐந்துள் இது இரண்டாவது தலம். இமயமலைச் சாரலில் உள்ளது.
நீலகண்ட சிகரம் என்ற அழகிய பெயரால் அழைக்கப்படும் இத்தலம் இந்திரன் வழிபட்டதாலும்,
மேகங்கள் சூழ்ந்திருப்பதாலும் இந்திர நீலப்பருப்பதம் என அழைக்கப்படுகிறது. இறைவன் நீலாசல நாதர். இறைவி நீலாம்பிகை.

தெய்வங்களுள் முதன்மையானவன் சிவபெருமான். இந்திரன்முதல் பலரும் நீலப்பர்வத இறைவனை போற்றிவழிபடுகின்றனர்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

No comments:

Post a Comment