1 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவலஞ்சுழி

                                            - சேர்ந்த
மலஞ்சுழி கின்ற மனத்தர்க்கு அரிதாம்
வலஞ்சுழி  வாழ் பொன் மலையே -

பொன்னால் செய்யப்பட்ட  மலையைப் போல் கோடி சூரியப் பிரகாசனாய் விளங்குபவர் சிவபெருமான்.
பல்வேறு பிறவிகளினாலும் சேர்ந்துள்ள பாவங்களால் இறைவனைத் துதிக்க விரும்பாதவர்களுக்கு கிடைத்தற்கரியவவனாக திருவலஞ்சுழியில் கோயில் கொண்டுள்ள இறைவா உன்னை வணங்குகிறோம்.

கும்பகோணத்துக்கு மேற்கில் 6 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூரில்  காவிரியாறு வலமாய் சுழித்து ஓடுதலால் வலஞ்சுழி எனப் பெயர் பெற்றது. இது விநாயகருக்கு உரிய தலம். கடல் நுரையினால் ஆன வெள்ளைப் பிள்ளையார் இங்கு சிறப்பு.

இறைவி : பெரியநாயகி
இறைவன்: கற்பகநாதர்
தலமரம்  : வில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலி வெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி


No comments:

Post a Comment