7 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

தென்குரங்காடுதுறை

                                                   - நீக்கமிலா
நன்கு உரம் காணும் நடையோர் அடைகின்ற
தென்குரங் காடுதுறைச் செம்மலே -

நீங்காத நல்ல ஒழுக்கம் எனும் உயர் பண்பில் ஊறித்திளைக்கின்ற நல்லோர்கள் தென்குரங்காடு துறையில் சேர்ந்து வாழ்கின்றனர். செம்மையான பண்பால் தலைமை உடையவனாய்த் திகழ்கின்ற
இறைவனாம் சிவ பெருமான் அவர்களுக்கு அருள் செய்கின்றார்.

இஃது ஆடுதுறை என வழங்கப்படுகிறது. திருவிடை மருதூருக்குக் கிழக்கில் 4 கி.மீ தொலைவில் உள்ளது. சுக்ரீவன் வழிபட்டதலம்.

இறைவன் : ஆபத்சகாயேச்வரர்
இறைவி    : கொம்பில் இளங்கோதை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்  - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment