8 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநீலக்குடி

                                                - புன்குரம்பை
ஏலக் குடிபுகுந்த எம்மனோர்க்கு உண்மைதரு
நீலக் குடியிலங்கு நிட்களமே -

துன்பம் நிறைந்தை இவ்வுடற் கூட்டை ஏற்றுக்கொண்டு வாழ்கிற என் போன்றவர்க்கு உண்மை ஞானம் தந்து அருள்புரிய திருநீலக்குடியில் களங்கமற்ற தூய வடிவினனாய் வீற்றிருக்கும் சிவபெருமானே, உம்மை வணங்குகிறோம்.

நீலக்குடி ஆடுதுறைப் புகைவண்டி நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. தற்பொழுது
'தென்னலக்குடி' என்று பெயர். நஞ்சை உண்டு இறைவன் நீலகண்டராய் விளங்கும் தலம். மரணபயம்,
 ராகு தோஷம் உள்ளவர்கள் வழிபடுகின்றனர்.

இறைவன்: நீலகண்டேஸ்வரர்
இறைவி  : அநூபமஸ்தனி, பக்தாபீஷ்டதாயினி
தலமரம்   : பஞ்சவில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment