2 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

கும்பகோணம்

                                                  - நிலஞ்சுழியாது
ஓணத்தில்  வந்தோ னுடன்றுதித்து வாழ்கும்ப
கோணத்தில் தெய்வக் குலக் கொழுந்தே -

இப்பூவுலகில் வாழ்பவர் வருந்தாது ஆனந்தமாய் இருக்க வேண்டும் என்பதற்காக திருவோண நட்சத்திரத்தில் பிறந்த திருமால் தன் அடியாருடன் வழிபடும் கும்பகோணத்தில் தெய்வகுலம்
தழைக்குமாறு குலக்கொழுந்தாய் விளங்குபவனே!

இவ்வூர் 'குடந்தை,' எனவும், 'திருக்குடமூக்கு,' எனவும் அழைக்கப்படுகிறது. கும்பகோணம் என்பது
குடமூக்கு என்பதன் வடமொழிபெயர்ப்பு. குடம் - கும்பம்; கோணம் - மூக்கு.

குடந்தை நகர் கும்பேஸ்வரன் கோயிலே திருக்குடமூக்கு ஆகும். இத்தலப் பெருமையை அப்பர்,''குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுகலாமே,'' என்று பாடியுள்ளார்.

இறைவன்: கும்பேஸ்வரர்
இறைவி   : மங்களாம்பிகை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்  - அருட்பெருஞ்சோதி

No comments:

Post a Comment