14 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருத்துருத்தி

                                           - பேராக்
கருத்திருத்தி  ஏத்தும்  கருத்தர்க் அருள்செய்
திருத்துருத்தி இன்பச் செழிப்பே -

 தன்னை வணங்குவார்க்கு  இதயத்தில்  பக்தி இன்பம் நாளும் செழித்து வளருமாறு செய்பவன் திருத்துருத்தி என்னும் தலத்தில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான்.
இறைவனை வழிபட வேண்டும் என்ற உறுதிப் பாட்டில் பிறழாது அவனை வணங்குவார்க்கு  அவன் அருள்
செய்வான்.

இப்போது குத்தாலம் என வழங்கப்படுகிறது. உத்தாலவனம் என்பது மருவி குத்தாலம் ஆனது. உடற்பிணி தீர்க்கும் தலம். கார்த்திகை மாதம் ஞாயிறு இத்தலச் சிறப்பு.

இறைவன் : உக்தவேதீஸ்வரர்
இறைவி    : அமிர்தகிழாம்பிகை
தலமரம்     : உத்தாலமரம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி



No comments:

Post a Comment