16 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவழுந்தூர்

                                                      - வருத்துமயல்
நாளும் அழுந்தூர்  நவையறுக்கும்  அன்பர் உள்ளம்
நீளும் அழுந்தூர் நிறைதடமே -

நிறை தடம் என்பது தண்ணீர் நிறைந்து காணப்படும் தடாகம் அல்லது குளம். தண்ணீரில் அழுந்தி நீராடுவது தூய்மையைத் தரும். தன்னை வணங்கித் துதிக்கும் அன்பர்களின் உள்ளத் தடாகத்தில் நிறைந்து அருளாகிய ஆனந்தம் தருபவர் திருவழுந்தூர் சிவபெருமான். இவ்வுலக வாழ்க்கையில் துன்பத்தைத்தரும் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குற்றங்களை நீக்கி  அருள் புரிகிறார்.

தேரழுந்தூர் என்று வழங்கப்படுகிறது. கம்பர் பிறந்த ஊர். இரும்பிடர்த் தலையார் என்ற தமிழ்ச் சான்றோர் வாழ்ந்த தலம்.

இறைவன் : வேதபுரீஸ்வரர்
இறைவி    : செளந்தராம்பிகை
தலமரம்     : சந்தனம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment