3 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

குடந்தைக் கீழ்க் கோட்டம்

                                            - மாணுற்றோர்
காழ்க்கோட்ட நீங்கக் கருதும் குடமூக்கில்
கீழ்க்கோட்ட மேவுமன்பர் கேண்மையே -

பிற உயிர்களிடம் கொண்டுள்ள வெறுப்பு நீங்கி, ஜீவகாருண்யம் தழைத்து ஓங்கவேண்டும் என்று விரும்புவோர் மாண்புடையவர்கள். அவர்களுடைய நண்பனாய் விளங்குகிறான் குடந்தைக் கீழ் கோட்டத்துச் சிவன்.

கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் என வழங்கப்படுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள நடராசரை
திருநாவுக்கரசர் தாண்டகப் பாடல்கள்தோறும் ,''குடந்தைக் கீழ்க் கோட்டத்தெம் கூத்தனாரே'' என்று பாடிப் பரவியுள்ளார்.

இறைவன்: நாகேஸ்வரநாதர்
இறைவி : பெரியநாயகி

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி


No comments:

Post a Comment