25 August 2013

புள்ளிருக்கு வேளூர் அருட்கூத்தனே


பரிதிபுரி என்ற புள்ளிருக்கு வேளூரில் வீற்றிருக்கின்ற அருட் கூத்தனே!
உன் திருவருளாலன்றி என் உடல் நோய் நீங்குமோ?
பொன்னேர் புரிசடை எம் புண்ணியனே!
இறைவனாம் என் அருமை  அப்பா,
சேவார் கொடி எம் சிவனே,
மையார் மிடற்று எம் மருந்தே, மணியே,
செம்மான் மழுக்கரங்கொள் செல்வச்சிவமே, என் அம்மா,
விரை சேரும் கொன்றை விரிசடையாய்,
விண்ணவர் தம் அரசே,
கொத்தார் குழலி ஒரு கூறுடைய கோவே,
தொண்டர் சிந்தைதனில் ஓங்கும் அறிவே,
இன்பே அருள்கின்ற என் ஆருயிரே,
என் அன்பே
உன்றன் நல்லருள் இல்லையேல் நோதல் தரும் எந் நோயும் நீங்குமோ?
என்னை வருத்தும் நோய்கள் வருந்துமாறு எனக்குத் திருவருள் புரிவீராக.


                                                                           - திருவருட்பா
                                                                           - திருவருட்பிரகாச வள்ளலார்

No comments:

Post a Comment