19 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பறியலூர்

                                         - இளமைச்
செறியலூர் கூந்தல் திருவனையார் ஆடும்
பறியலூர் வாழ்மெய்ப் பரமே -

 அடர்த்தியான கருங்கூந்தலையுடைய இளமங்கையர் திருமகளை ஒத்திருக்கிறார்கள்
 மெய்ப்பொருளாய் சிவபெருமான்  வாழும் திருப்பறியலூரில் இவர்கள் மனமகிழ்வோடு
விளையாடுகிறார்கள்.

இப்போது இதன் பெயர் பரசலூர். அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று.

இறைவன் : வீரட்டேசுரர்
இறைவி    : இலங்கொடியாள்
தலமரம்     : வில்வம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலி வெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment