22 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவலம்புரம்

                                          - எள்ளுறு நோய்
ஏய வலம்புரத்தை எண்ணாமல் எண்ணுகின்றோர்
மேய வலம்புரத்து மேதகவே -

பிறரால் இகழ்ந்தும், வெறுத்தும் நோக்கக்கூடிய நோய்களை அடையக் கூடியது மானிட உடல்.
இவ்வுடலின் நிலையாமையையும், நோயுற்றுப் படக் கூடிய அவலத்தையும்  உணர்ந்து கொண்டு
உடற்பற்று நீங்கி, உள்ளத்துறையும் திருவலம்புரத்து சிவனை வழிபடுவீராக.

தற்பொழுது 'மேலப்பெரும்பள்ளம்' என வழங்கப்படுகிறது. காவிரி நதிக்கு வலப்புறம் இருப்பதால் வலம்புரம் என்ற பெயர். திருமால் வழிபட்டு வலம்புரிச் சங்கினைப் பெற்ற தலம்.

இறைவன் : வலம்புரநாதர்
இறைவி    : வடுவகிர்க்கண்ணி
தலமரம்     : பனை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment