17 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமயிலாடுதுறை

                                        - வேளிமையோர்
வாயூரத் தேமா மலர்சொரிந்து வாழ்த்துகின்ற
மாயூரத் தன்பர் மனோரதமே -

தன்னை வணங்கி வாழ்த்துகின்ற அன்பர்களின் மனமாகிய தேரில் வீற்றிருந்து அருள் புரிபவன் மாயூரம் எனும் பதியில் கோயில் கொண்டள்ள சிவபெருமான். மன்மதனும், வானவரும் வாயினிக்க அவன் நாமம்
சொல்லி வாழ்த்த, மாயூரத்து மாமரங்கள் மலர் சொரிந்து வாழ்த்தும்.

காசிக்கு சமமான ஆறு தலங்களில் ஒன்று. மாயூரம் என்றும் வழங்கப்படுகிறது. அம்பாள் மயில் வடிவில் வழிபட்ட தலம். மயில் வடிவம் கொண்டு ஆடிய தாண்டவம் கெளரி தாண்டவம் எனப்படும். எனவே கெளரி
மாயூரம் என்றும் பெயர் பெற்றது.

இறைவன் : மயூரநாதர்
இறைவி    : அபயாம்பிகை
தலமரம்     : மா, வன்னி

திருவர்ட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


No comments:

Post a Comment