11 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்


திருக்கோழம்பம்

                                   - இல்லமயல்
ஆழம்பங் கென்ன அறிந்தோர் செறிந்தேத்தும்
கோழம்பம் வாழ்கருணைக் கொண்டலே -

இந்த இல் வாழ்க்கையில் ஏற்படும் விருப்பம் ஆழமான சேற்றில் இறங்குவது போல் ஆகும். உள்ளே இழுக்கும் சேற்றிலிருந்து வெளியே வருவது மிகவும் கடினம். அதனாலேயே அதனை மாயை என்பர்.
இந்த உண்மையை உணர்ந்தவர்கள் மயக்கம் தெளிந்து, ஒன்று சேர்ந்து, கருணைக்கடலாய் திருக்
கோழம்பத்தில் அருள்மழை பொழியும் சிவபெருமானை வழிபடுவர்.

இவ்வூர் கொளம்பியூர், திருக்குழம்பியம்  எனவும் அழைக்கப்படுகிறது. பசுவின் கால் குளம்பு இடறிய போது வெளிப்பட்ட மூர்த்தி. இந்திரன் வழிபட்டதலம். கோகிலம் வழிபட்டமையால் இறைவன் பெயர் 
கோகிலேஸ்வரர்.

இறைவன் : கோகிலேஸ்வரர்
இறைவி    : செளந்தரநாயகி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment