6 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவிடைமருதூர்

                                                             - ஓகையுளம்
தேக்கும் வரகுணனாம் தென்னவன்கண் சூழ்பழியைப்
போக்கும் இடைமருதின் பூரணமே -

நிறைந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்த தென்னவன் வரகுணபாண்டியனுக்கு ஏற்பட்ட பழியைப் போக்கி ஆட்கொண்டவன் திருவிடைமருதூர்ச் சிவன். அவனை வணங்குவோம்.

வரகுணபாண்டியன் வேட்டையாடித் திரும்பி வரும் வழியில் அவன் குதிரையின் குளம்பினால் ஒரு அந்தணன் மாண்டான். அதனால் அவனுக்குப் பழி ஏற்பட்டது. ஆலவாய் அண்ணல் அருளியபடி விடைமருதூர் கிழக்கு வாயிலைக் கடந்து உள்ளே புகுந்ததும் அவனைப் பற்றிய பழி நீங்கிற்று.

பட்டினத்தார் பக்தியுடன் பணிந்த இப்பதி கும்பகோணத்துக்கு வடகிழக்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இது மஹாலிங்கத்தலம் எனப்படுகிறது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


No comments:

Post a Comment