4 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

குடந்தைக் காரோணம்

                                        - வாழ்க் கோட்டத்
தேரோண மட்டுந் திகழ்குடந்தை மட்டுமன்றிக்
காரோண மட்டும் கமழ் மலரே -

நம்முடைய உடல் தேர் போன்றது. அதிலே வீற்றிருந்து இறைவன் நம்மை நடத்திச் செல்கிறான்.
அதே போல குடந்தையிலும், குடந்தைக் காரோணத்திலும் சிவமணம் வீசும் வாடாமலராய் அனைவருக்கும் அருள் புரிகிறான்.
காயாரோகணம் என்பது காரோணம் எனவும், தேரோகணம் தேரோணம் எனவும் சிதைந்து
வந்துள்ளது. இவ்வுடம்புடன் மேல் உலகு செல்வது  காயாரோகணம் ஆகும். இவ்வாறு ஒருவர் சித்தி அடைந்த இடம் குடந்தைக் காரோணம்.

மகாமகக் குளத்தின் வடகரையில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் கோயில் இதுவாகும். இங்கு சப்த கன்னியர் சந்நிதி விசேடமானது.

இறைவன் : காசிவிசுவநாதர்
இறைவி   : விசாலாட்சி

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

No comments:

Post a Comment