31 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பழையாறை வடதளி

                                              - துட்டமயல்
தீங்குவிழை யார்தமைவான் சென்றமரச் செய்விக்க
ஓங்குபழை  யாறையிலென் உள் உவப்பே - பாங்குபெற
ஆர்ந்த  வடவிலையான் அன்னத்தான் போற்றிநிதம்
சார்ந்த வடதளிவாழ் தற்பரமே - 

பட்டீச்சரத்துக்கு கிழக்கே உள்ளது, பழையாறை. சோழர்களின் தலைநகரங்களில் ஒன்று. வடதிசையில்
அமைந்த சிவாலயம் பழையாறை வடதளி. இரண்டும் வேறு வேறாக உள்ளன. சமணரால் வடதளிக் கோயில் மறைக்கப்பட்டிருந்தது. அதை அறிந்த திருநாவுக்கரசர் அங்கு உண்ணாவிரதம் இருந்ததாகவும், மன்னன் முயற்சியால் மறைக்கப் பட்டிருந்த கோயில் வெளிப்பட்டதாகவும் தல
புராணம் கூறுகிறது.
இனி வள்ளல் பெருமான் கூறுவதைக் கேட்போம் - தீயசெயல்கள் அறிவின்மையால் ஏற்படும் மயக்கத்தாலேயே உண்டாகின்றன.  தீமைபுரியாத நன்மக்களை வான் உலகு சென்று உள்ளமெல்லாம் இன்பவெள்ளம் பாயுமாறு  வாழ்விப்பவர் பழையாறை நகரிலே, வீற்றிருக்கும்  சிவபெருமான்!
ஆலிலைமேல் துயின்ற திருமாலும், அன்னப் பறவையை ஊர்தியாகக் கொண்ட பிரமனும் நாள்
தோறும் வந்து வடதளி ஈசனை வணங்கிச் செல்கிறார்கள்.

இறைவன்:தர்மபுரீஸ்வரர்
இறைவி   : விமலநாயகி
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி.

No comments:

Post a Comment