28 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

ஆவூர்ப் பசுபதீச்சுரம்

                                        - மல்லார்ந்த
மாவூ ரிரவியின்பொன் வையமள வுஞ்சிகரி
ஆவூரி லுற்ற எங்கள் ஆண்தகையே -

 உயர்ந்த சிகரங்களையுடைய   திருஆவூர்ப்பசுபதீச்சுரத்தில் ஆண்தகையாய்  பெருமையுடன் வீற்றிருக்கிறார் சிவபெருமான்!  வளம் மிக்க ஏழு குதிரைகளைப் பூட்டிய பொன்னிறத் தேரில்
கதிரவன் கடலிலிருந்து எழுந்து வந்து வையம் முழுவதையும், ஆவூரின் சிகரங்களையும் தழுவுகிறான்.

கும்பகோணம் புகை வண்டி நிலையத்திலிருந்து  13 கி.மீ தொலைவில் உள்ளது. ஆவூர் என வழங்கப்படுகிறது. காமதேனுவிற்கு வசிட்டரால் ஏற்பட்ட சாபம் நீங்க இங்கு வந்து வழிபட்டதால் நீங்கியது.எனவே ஆவூர். ஆ- பசு. பசுபதீச்சுரம் என்பது கோயில் பெயர்.

இறைவன் : பசுபதீஸ்வரர்
இறைவி    : மங்களநாயகி, பங்கஜவல்லி
தலமரம்     : அரசு

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி


No comments:

Post a Comment