29 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருச்சத்தி முற்றம்

                                           - ஓவாது
சித்திமுற்ற யோகம் செழும் பொழிலில் பூவைசெயும்
சத்திமுற்ற மேவும் சதாசிவமே -

திருச்சத்தி முற்றம் எனும் சோலைகள் சூழ்ந்த ஊரில் சதாசிவமாய் வீற்றிருக்கும் பரம்பொருளே! இவ்வூர்ப் பறவைகளான மைனாக்கள் சற்றும் நிறுத்தாமல் எண்வகை சித்திகளும் கிடைப்பதற்காக
யோகம் செய்யும் புண்ணியம் செய்துள்ளன!

கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. சத்திமுத்தம் என்று வழங்கப்படுகிறது. இங்கு இறைவனை அம்பிகை வழிபட்டு லிங்கத்தைத் தழுவி முத்தமிட்ட திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.  இங்கு  மனமார வேண்டிக்கொள்வதெல்லாம் நிறைவேறும்.

இறைவன் : சிவக்கொழுந்தீசர்
இறைவி    : பெரிய நாயகி
தீர்த்தம்     : சூலதீர்த்தம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

No comments:

Post a Comment