26 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பாலைத் துறை

                                                    - முருகார்ந்த
சோலைத் துறையில்  சுகஞ்சிவநூல் வாசிக்கும் 
பாலைத் துறையிற் பரிமளமே -

அழகும், மணமும், தேனும் நிறைந்த மலர்ச்சோலைகள்! அவை வளம்பெற நீர்த்துறைகள்! இங்கு
படிக்கப் படிக்க சுகம் தரும், இன்பமளிக்கும் சிவபெருமானைப் போற்றும் சைவ நூல்களை ஓதும்
அறிஞர்கள்!சிவஞான மணம் கமழும் ஊர் திருப்பாலைத் துறை.

கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் பாபநாசத்திற்கு முன்பாக உள்ளது. பாண்டவர்கள் வனவாசத்தின்
பொழுது அர்ச்சுனன் இங்கு வந்து வில்வித்தை நுட்பங்களை உணர்ந்ததாக தலபுராணம் கூறுகிறது.
இறைவன் :பாலைவனநாதர்
இறைவி   : தவளை வெண்ணகையாள்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி.

No comments:

Post a Comment