8 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவேதிகுடி

                                    - ஆற்றலிலாத்
தீதிக் குடிஎன்று செப்பப் படார்மருவும்
வேதிக் குடியின்ப வெள்ளமே - 

இவர்கள் நல்லவர் அன்று. தீயவர்களான இவர்களுடன் வாழ்வது குற்றம் என்று சொல்லக்கூடிய அளவில் சிலர் இருப்பார்கள். அதனால்தான் 'துஷ்டரைக் கண்டால் தூர விலகு,' என்னும் பழமொழி வழங்குகிறது.
மேலும் 'தீயாரைக் காண்பதுவும் தீதே, திருவற்ற தீயோர் சொல் கேட்பதுவும் தீதே,' எனத் தீய குணமுடையாரிடமிருந்து  விலகிப் போகிறோம். இன்ப வெள்ளமாக விளங்கும் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கும் திருவேதிக்குடியில் நல்லவர்களே வந்து வழிபடுகிறார்கள். (குடி - குடியிருப்பு)

இவ்வூர் திருக்கண்டியூர்க்குக் கிழக்கில் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சப்தஸ்தானத் தலங்களில் ஒன்று. இங்கு இறைவன் அர்த்த நாரீஸ்வரர் வடிவில், வலப்புறம் உமையும், இடப்பால் சிவனுமாக அமர்ந்திருக்கிறார். இது ஒரு திருமணப் பிரார்த்தனைத் தலமாகும்.

இறைவன் : வேதபுரீஸ்வரர்
இறைவி    : மங்கையர்க்கரசி
தலமரம்    : வில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment