6 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கண்டியூர்

                                          - காந்தருவத்
தண்டியூர் போற்றும் தகைகாசிக் கண் செய்து
கண்டியூர் வாழும் களைகண்ணே -

காந்தர்வர்கள் விரும்பும் அழகைக் காசி நகருக்குத் தந்தவர் சிவபெருமான். அதுபோன்ற சிறப்பை
திருக்கண்டியூர் பெரும் வண்ணம் கோயில் கொண்டு அனைத்து உயிர்க்கும் அருள் செய்யும் சிவமே!

இவ்வூர் திருவையாற்றுக்குத் தெற்கில் காவிரித் தென்கரையில் இருக்கிறது. மாசிமாதம் 13,14, 15 நாட்களில்மாலையில் சூரிய ஒளி ஈஸ்வரன் மீது படுகிறது.

இறைவன் : வீரட்டானேஸ்வரர்
இறைவி    : மங்களநாயகி
தலமரம்     : வில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment