2 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநெடுங்களம்

                                              - துன்றுகயல்
கண்ணார் நெடுங்களத்தைக் கட்டழித்த மெய்த்தவர்சூழ்
தண்ணார் நெடுங்களமெய்த் தாரகமே -

(துன்றுகயல் கண்ணார் - நெருங்கிய மீன் போல் விளங்கும் கண்களையுடைய பெண்டிர்)
(தண்ணார் நெடுங்களம் - குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த திரு நெடுங்களம்
என்ற ஊர்) கயல்போலும் கண்களையுடைய பெண்டிரின் காம வலையில் வீழாது தங்களுடைய
மனதை வென்ற தவயோகியருக்கு ஆதாரமாக விளங்குபவர் திரு நெடுங்களத்துச் சிவன்.
அவரை வழிபடுங்கள் என்றவாறு.

 திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் துவாக்குடி என்ற ஊரிலிருந்து 3 கி. மீ.
தொலைவில் உள்ளது. திருஞானசம்பந்தர் இடர்களையும் பதிகம் ஒன்றைப் பாடியுள்ளார்.

இறைவன்: நெடுங்களநாதர், நித்யசுந்தரேஸ்வரர்
இறைவி   : ஒப்பிலாநாயகி
தலமரம்    : வில்வம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்






No comments:

Post a Comment