22 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்புள்ள மங்கை

                                               - நன்குடைய
உள்ள மங்கை மார்மேல் உறுத்த தவர்புகழும்
புள்ள மங்கை  வாழ்பரம போகமே -

நன்மை நிறைந்த தம் மனத்தை சான்றோர் சிற்றின்ப போகத்தில் செலுத்த மாட்டார்கள்.  அத்தகைய
மன உறுதி உடையவர் வாழும் ஊர் திருப்புள்ளமங்கை. இவ்வூரில் மேன்மையடையச் செய்யும் சிவபோகத்தைத்தருபவர் சிவபெருமான். சான்றோர் எப்போதும் திருப்புள்ளமங்கைச் சிவனை புகழ்ந்து போற்றுவர். நாமும் அவரைப் போற்றி, வாழ்த்தி வணங்குவோமாக.

இவ்வூர் திட்டையை அடுத்துள்ள புகைவண்டி நிலையமான பசுபதி கோயிலுக்கு வடமேற்கில் 2 1/2 கி.மீ தொலைவில் இருக்கிறது. இங்கு மஹிஷாசுரமர்த்தினி (துர்க்கை) சிறப்புடையது. திருப்புள்ளமங்கை, பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம்  ஆகிய இம்மூன்று ஊர்களிலும் உள்ள துர்க்கைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவை மூன்றும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை. அமுதம் கடைந்த போது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் என்பது தலபுராணச்செய்தி. இது சக்கரப்பள்ளி சப்தமங்கைத் தலங்களுள் ஒன்றாகும்.

இறைவன் : ஆலந்தரித்தநாதர்
இறைவி    : அல்லியங்கோதை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி! 

No comments:

Post a Comment