30 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பட்டீச்சரம்

                                          - பத்தியுற்றோர்
முட்டீச் சுரத்தின் முயலா வகையருளும்
பட்டீச் சரத்துஎம் பராபரமே -

(ஈச்சுரம் - இறைவன் உறையும் கோயில்) (பத்தி) பக்தி
சிவபக்தியுடையவர் பராபரமான சிவபெருமான் உள்ள திருக்கோயிலைக் காண எந்தத் தடையும் இல்லாவகை பட்டீச்சுரத்தில் கோயில் கொண்டு  அருள் பாலிக்கிறார்.

பட்டீச்சரத்திற்கும் சத்திமுற்றத்துக்கும் இடையே ஒரு தெருதான் உள்ளது.காமதேனுவின் புதல்வி
பட்டி பூசித்ததால் பட்டீச்சரம். இங்கு ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தர் அருளினார்.
ஞானசம்பந்தர் வரும் காட்சியைக்  கருவறையிலிருந்து  காண நந்தியை விலகி இருக்கச் சொன்னாராம். எனவே இத்தலத்தில் உள்ள ஐந்து நந்திகளும் சந்நிதியிலிருந்து விலகியுள்ளன.
வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அஷ்டபுஜ துர்க்கை விசேஷம். ஊர் பழையாறை. கோயில் பட்டீச்சரம். வாலியைக் கொன்றதால் இராமபிரானுக்கு ஏற்பட்ட சாயா தோஷம் இங்குதான் நீங்கியது.
இராமபிரான் ஸ்தாபித்த லிங்கம் இன்னும் வழிபாட்டில் உள்ளது. இக்கோயில் கிழக்கு மேற்கில் 650  அடி,தெற்கு வடக்கில் 295 அடி. இங்குள்ள துர்க்கை வரப்பிரசாதி. சம்பந்தர் பதிகம் உள்ளது.
இறைவன் :பட்டீச்சரர்,தேனுபுரீஸ்வரர்
இறைவி    : பல்வளை நாயகி, ஞானாம்பிகை
தலமரம்     : வன்னி

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்  - அருட்பெருஞ்சோதி





No comments:

Post a Comment