4 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவாலம்பொழில்

                                                   - மருக்காட்டு
நீலம் பொழிற்குள் நிறை தடங்கட் கேர் காட்டும்
ஆலம் பொழில் சிவயோ கப்பயனே -

நல்ல மணம் வீசும் மலர்ச் சோலை; சோலையின் நடுவே தண்ணீர் நிறைந்த நீர் நிலை.
அந்த நீர்நிலையில் நீல நிறமலர்கள் நிறைந்திருக்கின்றன. இத்தகைய தோற்றப் பொலிவு நிறைந்த திருவாலம்பொழில் என்ற பெயருடைய இவ்வூரில் சிவயோகப் பயனாய் விளங்குகிற சிவ பெருமானுக்கு வந்தனங்கள்.

இவ்வூர் தஞ்சைக்கு வடக்கில் திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி என்ற ஊர்களுக்கு அப்பால் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதி. அப்பர் ஒரு பதிகம் படியுள்ளார்.

இறைவன் : ஆத்மநாதேஸ்வரர்
இறைவி    : ஞானாம்பிகை
தலமரம்     : ஆல்

திருவருட்பிரகாச வல்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment