7 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருச்சோற்றுத்துறை

                         - கொண்டியல்பின்
வேற்றுத் துறையுள் விரவா தவர் புகழும்
சோற்றுத் துறையுள் சுகவளமே -

 திருச்சோற்றுத் துறை என்னும் பதியில் தன்னை வணங்குபவர்க்கு சுகத்தையும், வாழ்க்கை வளத்தையும் தரும் சிவபெருமானை யார் புகழ்கிறார்கள்? சிவ நெறியை மட்டுமே பற்றிக் கொண்டு பிற சமயத் துறைக்
குள் கலவாத சிவபக்தர்கள் புகழ்கிறார்கள்! சோறு - முக்தியின்பம்.

இவ்வூர் கண்டியூர்க்குக் கிழக்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்று.
இறைவன் : தொலையாச்செல்லர்
இறைவி    : அன்னபூரணி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment