3 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

மேலைத் திருக்காட்டுப் பள்ளி

                                                       - எண்ணார்
தருக்காட்டுப் பள்ளித் தகைகொண்டோர் சூழும்
திருக்காட்டுப் பள்ளியில்வாழ்  தேவே -

பகைவர்களுடைய செருக்கை (கர்வத்தை) அழிப்பதற்கு மனவலிமை வேண்டும்.  இத்தகைய மனவலிமை
உடையவர்கள்  திருக்காட்டுப் பள்ளி இறைவனை சூழ்ந்து துதிக்கிறார்கள்.

இவ்வூர் திருக்காட்டுப் பள்ளி என அழைக்கப்படுகிறது. அக்னீஸ்வரம் என்ற பெயர் இக்கோயிலுக்கு உண்டு.

இறைவன் : தீயாடியப்பர்
இறைவி    :செளந்தரநாயகி
தலமரம்     : வன்னி, வில்வம்

திருவருட்பிரகாசவள்லலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment