27 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநல்லூர்

                                                 - சீலத்தர்
சொல்லூர் அடியப்பர் தூயமுடி மேல் வைத்த
நல்லூர் அமர்ந்த நடுநாயகமே -

இந்த ஊர் நல்ல ஊர்! ஏன்? (சீலத்தார் சொல்லூர் அடி) சைவ ஒழுக்கமுடைய பெரியோர் புகழ்ந்து பேசும் இறைவனின் திருவடிகள் -  நடுநாயகமாகத் திகழ்கிறது இவ்வூரில்!அப்பர் பெருமானுடைய தூய
முடிமேல் தன் திருவடிகளை வைத்து சிவபெருமான் அருள் புரிந்தார். அப்பர் திருச்சத்தி முற்றத்தில்
தன் முடி மேல் அடி வைக்கும்படி வேண்டியதற்கு, இறைவன் இந்தத் திருநல்லூரில் தம் திருவடியை
அவரது முடி மேல் வைத்தருளினார்.
                 
மூலவர் சிவலிங்கத் திருமேனி சுயம்பு! ஒரு நாளில் ஆறு நாழிகைக்கு ஒரு முறை ஐந்து முறை நிறம்
மாறுகிறது.  இதனால் இறைவனுக்குப் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற பெயர் உள்ளது. வண்டு வடிவம் கொண்டு பிருங்கி முனிவர் வழிபட்டார்.அதனால் சிவலிங்கத்தில் துளைகள் உள்ளன.

கும்பகோணத்திலிருந்து  தஞ்சாவூர் செல்லும் பாதையில் வலங்கைமான் செல்லும் சாலையில் உள்ளது.
இறைவன் : பெரியாண்டேஸ்வரர்
இறைவி    : திரிபுர சுந்தரி
தீர்த்தம்     : சப்தசாகர தீர்த்தம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

No comments:

Post a Comment