24 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கருகாவூர்

                                              - மிக்க
அருகாவூர் சூழ்ந்தே அழகு பெற ஓங்கும்
கருகாவூர் இன்பக் கதியே -

மிக்க அண்மையில்  வளமான ஊர்கள் சூழ்ந்து அழகு பெற்று ஓங்கும் திருக்கருகாவூரின் இன்பமே. நீயே கதியென உன்னை வணங்குகிறோம்.

பாபநாசம் புகை வண்டி நிலையத்திலிருந்து தெற்கே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பஞ்சாரண்யத் தலங்களில் ஒன்று.திருக்களாவூர் என்றும் வழங்கப்படுகிறது. இத்தலத்தை வழிபடும்
கருவுற்ற பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை.

இறைவன் : முல்லைவனநாதர்
இறைவி   : கர்ப்பரட்சாம்பிகை
தலமரம்   : முல்லை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெரும்சோதி

No comments:

Post a Comment