11 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

தென் குடித் திட்டை

                                      - கோதியலும்
வன்குடித் திட்டை மருவார் மருவுதிருத்
தென்குடித் திட்டைச் சிவபதமே -

(கோது - குற்றம். திட்டை - புன்செய் நிலம்)
குற்றம் செய்யும் வன்மனக் குடியினர் வாழும் இடத்தைச் சேராமல் நல்ல மனமுடைய சான்றோர் விரும்பியடையும் திருத்தென்குடித் திட்டை என்னும் பதியில் வீற்றிருக்கும் சிவனே உம்மை வணங்குகிறேன்.
நவக்கிரஹங்களில் குருவுக்கு உரிய தலம். காவிரியின் கிளைகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் திட்டில் அமைந்துள்ளதால் திட்டை எனப்படுகிறது. தேனுபுரி என்ற பெயரும்
உண்டு. ஈஸ்வரன் சுயம்புத் திருமேனி. கருவறையின் சிவலிங்கம் இருக்கும் பகுதியின் மேல் சந்திரகாந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளதால் சிவலிங்கத்தின் மீது அரைமணிக்கு ஒரு சொட்டு நீர்
விழுகிறதாம். இங்குள்ள திருநீற்றுக் கோயில் காணத்தக்கது.

இறைவன் : பசுபதி நாதர்
இறைவி    : உலகநாயகி
தலமரம்    : வில்வம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment