13 January 2013

89. ஶ்ரீ வில்லிபுத்தூர்

                                 ஶ்ரீ வில்லிபுத்தூர்

                  கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
                  சோதி மணிமாடந்  தோன்றுமூர்
                  நீதியால் நல்ல பத்தர் வாழுமூர்
                  நான்மறைகள் ஓதுமூர்
                  வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.

                 பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
                 வேதமனைத்துக்கும்  வித்தாகும் - கோதை தமிழ்
                 ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை
                 வையம் சுமப்பதும் வம்பு.

                 திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
                 திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
                 பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
                 பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
                 ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
                 உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
                 மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
                 வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே.

No comments:

Post a Comment