10 January 2013

86. திவ்யப்பிரபந்தம் - பூதத்தாழ்வார்


          உளன் கண்டாய் நன்னெஞ்சே! உத்தமனென்றும்

          உளன் கண்டாய்  உள்ளுவாருள்ளத்து ----உளன்கண்டாய்

          வெள்ளத்தினுள்ளானும் வேங்கடத்துமேயானும்

          உள்ளத்தினுள்ளானென்று ஓர்.

          ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்

          ஈரடியும் காணலாம்  என்னெஞ்சே! ---ஓரடியின்

          தாயவனைக் கேசவனைத்  தண்துழாய்மாலைசேர்

         மாயவனையே மனத்து வை. 

No comments:

Post a Comment