9 January 2013

85. திவ்யப்பிரபந்தம் - பொய்கையாழ்வார்


          வையம் தகளியா  வார்கடலே நெய்யாக

          வெய்ய கதிரோன் விளக்காக ---செய்ய

          சுடராழி யானடிக்கே  சூட்டினேன் சொல்மாலை

          இடராழி நீங்குகவே யென்று.


         வாய் அவனை அல்லது வாழ்த்தாது  கையுலகம்

         தாயவனை அல்லது  தான் தொழா --பேய்முலை நஞ்சு

         ஊணாக உண்டான் உருவொடு  பேரல்லால்

         காணா கண்  கேளா செவி.

No comments:

Post a Comment