12 January 2013

88. திருவருட்பா - ஆனந்தானுபவம்


            கண்டேன்  களித்தேன்  கருணைத்  திருவமுதம்

            உண்டேன்  உயர்நிலைமேல்  ஓங்குகின்றேன் ---கொண்டேன்

            அழியாத்  திருவுருவம் அச்சோஎஞ்   ஞான்றும்

            அழியாச்சிற்  றம்பலத்தே   யான்.5

            பார்த்தேன்  பணிந்தேன்  பழிச்சினேன்  மெய்ப்புளகம்

            போர்த்தேன்என்  உள்ளமெலாம்  பூரித்தேன் --ஆர்த்தேநின்

            றாடுகின்றேன்  பாடுகின்றேன்   அன்புருவா  னேனருளை

            நாடுகின்றேன்  சிற்சபையை  நான்.6

                    திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment