15 May 2014

அருணாசல அட்சர மணமாலை - காப்புச் செய்யுள்

அருணாசல வரற்கேற்ற அக்ஷரமண மாலை சாற்ற
கருணாகர கணபதியே கரமருளிக் காப்பாயே

வரன் - சிறந்தவன், தலைவன், நாயகன்; அக்ஷயம் - சிறந்தது, சாற்ற - அணிவித்தல், சொல்லுதல்.

எந்த ஒரு செயலைச் செய்தாலும் , செய்யும் செயல் வெற்றி பெற விநாயகரை வணங்குவது வழக்கம்.
அதே போல மிகச் சிறந்த (வரன்) தலைவனாகிய அருணாசலனுக்கு, பொருத்தமான தமிழ் எழுத்துக்களால் கட்டப்பட்ட  மணமாலையை வாய் நிறையச் சொல்லி மகிழவும், அணிவிக்கவும்  கருணை நிறைந்த விநாயகப் பெருமானே, உன் திருக்கரங்களால் ஆசி வழங்கி  அருள் புரிவாய்.



Invocation
Gracious Ganapati with Thy (loving) hand bless me, that I may make this a marital garland of letters worthy of SriArunachala, the Bridegroom!
( Translation courtesy Ramanasramam)

No comments:

Post a Comment