1 May 2014

திருவருட்பா - சின்னம் பிடி

அம்பலவர் வந்தார் என்று சின்னம் பிடி
அற்புதம் செய்கின்றார் என்று சின்னம் பிடி

சிற்சபையைக் கண்டோம் என்று சின்னம் பிடி
சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம் பிடி

பொற்சபை புகுந்தோம் என்று சின்னம் பிடி
புந்தி மகிழ்கின்றோம் என்று சின்னம் பிடி

ஞானசித்திபுரம் என்று சின்னம்பிடி
நாடகம் செய் இடம் என்று சின்னம் பிடி

அப்பர் வருகின்றார் என்று சின்னம்பிடி
அற்புதம் செய்வதற்கென்று சின்னம்பிடி

அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை.

No comments:

Post a Comment