20 May 2014

5. அருணாசல அட்சரமணமாலை

5. இப்பழி தப்பு உனை ஏன் நினைப்பித்தாய்
        இனியார் விடுவார் அருணாசலா

ஶ்ரீரமணர் சொல்கிறார்:
மதுரை மாநகரில் சிவனே என்று இருந்த என்னை உறவினர் ஒருவர் வாய்வழி அருணாசலம் என்ற பெயரைக் கேட்கச் செய்தாய்.
உடனே உள்ளத்தில் புகுந்து, என்னைக் கவர்ந்து, உன் இதய குகையிலே சிறை வைத்தாய்.
இப்போது என்னை அகற்றிடுவேன் என்கின்றாய். அப்படிச் செய்தால் உன்னை அகிலம் பழித்திடும்!  வேண்டாம், இந்த பழிச்சொல் உனக்கு வராமல் உன்னை பாதுகாத்துக் கொள்.
நீதானே உன்னை நினைக்கும்படிச் செய்தாய்? உன்னிடம் பக்தி கொள்ளச் செய்தாய்?
இனிமேல் நான் உன்னை விடுவேனோ? விடமாட்டேன்.

(என்னைக் கைவிட்டால் வரும் பழியிலிருந்து உன்னை விடுவித்துக்கொள். நீதானே என்னை, உன்னை நினைக்குமாறு செய்தாய்! இனி உன்னை நான் விடமாட்டேன்)

வள்ளலார் பாடுகிறார்,' உன்னை நான் மறந்திடுவேனோ, மறந்தால் கணம் தரியேன், உயிர் விடுவேன் உன் ஆணை இது. என்னை நீ மறந்தால் நான் என்ன செய்வேன், எவர்க்கு உரைப்பேன், எங்குறுவேன், எந்தாய், எந்தாய்'  காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கிப் பாடும்  இப்பாடல்கள் அமைதி கலந்த ஆனந்தத்தைத் தருகின்றன அல்லவா? அருணாசலத்தை மறவாமல் வழிபடுவோம்.
அருணாசல சிவ, அருட்பெருஞ்சோதி.

No comments:

Post a Comment