27 May 2014

12. அருணாசல அட்சரமணமாலை

ஒருவனாம் உன்னை ஒளித்தெவர் வருவார்
       உன் சூதே இது அருணாசலா!

இறைவனாம் அருணாசலனுடன் ஶ்ரீரமணர் உரையாடுகிறார்! சில பல சமயங்களில் வாய் திறந்து பேசுவதைவிட மெளனமான உரையாடல்கள் நம்முள் நடைபெறுகின்றன.

முந்தைய கண்ணியில், 'ஐம்புலன்களான கள்வர்கள் என் அகத்தில் புகும் போது நீ என் உள்ளத்தில் இருக்கவில்லையோ?' என்ற கேள்வியைக் கேட்டார். இந்தக் கண்ணியில் அதற்கு பதில் சொல்கிறார்.

இறைவன் ஒருவனே எல்லாம் வல்லவன். அவனன்றி இரண்டாவது இல்லை. "அவனன்றி ஓரணுவும் அசையாது,'' அவனருளாலே அவன் தாள் வணங்கிறோம். அவன்தான் ஒருவன்!
"ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென அவை அன்றென விளங்கிய அருட்பெருஞ் சோதி,''என்பது அகவல்.
ஒவ்வொரு ஜீவனிலும் ஆன்மப் பிரகாசமாக விளங்குவது ஒன்றே.
பார்த்தாயா, என்னோடு விளையாடுகிறாயே! உனக்குத் தெரியாமல், திருட்டுத்தனமாக வேறு யார் என்னுள்ளத்தில் புகமுடியும்? எல்லாம் உன்னுடைய விளையாட்டு! எனக்கு எல்லாம் தெரியும் போ!
என்னை ஏமாற்றாதே என்கிறார்.
அடுத்து என்ன சொல்கிறார் பார்ப்போம்!






No comments:

Post a Comment