25 May 2014

10. அருணாசல அட்சரமணமாலை

10.ஏனிந்த உறக்கம் எனைப் பிறர் இழுக்க
       இது உனக்கு அழகோ அருணாசலா!

ஐம்புலன்களும் என்னை அத்தனை திசைகளிலும் கவனத்தை மாற்றி இழுக்கின்றன. நீ என்ன செய்கிறாய்? உறங்கிக் கொண்டு இருக்கிறாய்! உறங்குகிறாயா, இல்லை உறங்குவதுபோல் நடிக்கின்றாயா? இது உனக்கே நியாயமா? அருணாசலனுக்கு ஏது உறக்கம்?
  
முந்தைய கண்ணியில் "இதுவோ ஆண்மை?" என்றவர் இப்போது "இது உனக்கு
அழகோ" என்று செல்லமாக அருணாசலனை கோபிக்கிறார்.
'ஊர் சுற்றும் உள்ளத்தை அடக்க உனதழகைக் காட்டு,' என எட்டாவது கண்ணியில் சொன்னார்.
அழகு என்பது இறைவனின் கருணை நிறைந்த உள்ளத்தைக் குறிக்கிறது.


அட்சர மணமாலை முழுதும்  பல்வேறு காட்சிகள்  நம் கண்முன் அரங்கேற, ஒரு இனிய நாடகத்தைப் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

No comments:

Post a Comment