29 April 2014

ஊதூது சங்கே

 கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே
கனக சபையான் என்று ஊதூது சங்கே

பொன்னடி தந்தான் என்று ஊதூது சங்கே
பொன்னம் பலத்தான் என்று ஊதூது சங்கே

அச்சம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே
அம்பல வாணன் என்று ஊதூது சங்கே

பொன் உருத் தந்தான் என்று ஊதூது சங்கே
பொற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே

சிவமாக்கிக் கொண்டான் என்று ஊதூது சங்கே
சிற்றம் பலத்தான் என்று ஊதூது சங்கே.
                        **************

அருட்பெருஞ் சோதி தனிப் பெருங்கருணை

No comments:

Post a Comment