20 April 2014

அபயத் திறன்

(அபயம் வேண்டுதற்கான தீய குணம் செயல்களால் விளையும் தீமைகளை எடுத்துக் கூறி அஞ்சவேண்டா என அபயம் அளிக்குமாறு வேண்டுதல்) அபயம் - அடைக்கலம்; புகல்

ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும்
    ஊக்கமும் உண்மையும் என்னைத்
தான்பெறு தாயும் தந்தையும் குருவும்
    தனிப்பெருந் தெய்வமுந் தவமும்
வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும்
     மக்களும் மனைவியும் உறவும்
நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே
     நம்பினேன் கைவிடேல் எனையே.

1என் உடலிலே உள்ள என் உயிரும்,
2 உணர்ச்சியும்,
3 அன்பும்,
4 ஊக்கமும்,
5 உண்மையும்,
6 என்னைப் பெற்ற தாயும், தந்தையும், குருவும்,
7 தனக்கு நிகரில்லாத தெய்வமும்,
8 தவமும்,
9 பெருமைதரும் செல்வமும்,
10 வாழ்வும்,
11 நல்ல துணையும்,
12  மக்களும்,
13 மனைவியும்,
14 உறவும்,
15 நண்பனும்,
16 மற்று எல்லாமும்
நீயே
என்றே நம்பினேன்
கைவிடேல் எனையே,
கைவிடேல் எனையே, கைவிடேல் எனையே.

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி.










No comments:

Post a Comment