1 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்( தொடர்கிறது)


திருஆக்கூர்

                                                   - பொங்குமிருள்
கூறுதிரு ஆக்கூர் கொடுப்பனபோல் சூழ்ந்து மதில்
வீறுதிரு  வாக்கூர் விளக்கமே -

செல்வம் இருக்கும் இடத்தை பிறர் அறியாமல் காப்பது இருள். அதுபோல பொன்னும் மணியும் செறிந்து  பேரொளி விளங்கும் திருவாக்கூரின் ஒளியைக் குறைத்துக் காட்டுகின்றன அவ்வூரின் மதிற்சுவரும், வானளாவிய மரங்கள் நிறைந்த சோலையும்!  மனிதர்களுடைய மன இருளை நீக்கி தெளிவு தரும்  ஒளி விளக்காய் சிவபெருமான் திருவாக்கூரில் வீற்றிருக்கிறார்.

சீர்காழியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் உள்ளது. கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்.
இறைவன் : தாந்தோன்றீஸ்வரர்
இறைவி   : வான்நெடுங்கண்ணி
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி


No comments:

Post a Comment