4 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவேட்டக்குடி

                                              - வற்கடத்தும்
வாட்டக் குடிசற்றும் வாய்ப்பதே இல்லை எனும்
வேட்டக் குடிமேவு மேலவனே -

வற்கடம் - பஞ்சம்; வாட்டம் - பஞ்சத்தால் உண்டாகும் துன்பம்.
திருவேட்டக் குடியில் அனைவருக்கும் மேலான சிவபெருமான் அருள்புரிந்து வருகிறார்.எனவே பஞ்சம் ஏற்பட்டாலும் இவ்வூர் மக்கள் சற்றும் துன்பப்பட வாய்ப்பில்லாத ஊர் திருவேட்டக்குடியாகும்.

இத்தலம் காரைக்காலுக்கு வடகிழக்கில் 10 கி.மீ தொலைவில் உள்ளது.

இறைவன் : திருமேனியழகர், சுந்தரேஸ்வரர்
இறைவி    : சவுந்தர நாயகி, சாந்தநாயகி
தீர்த்தம்     : தேவதீர்த்தம்

திருவருட்பிரகாசவள்ளலார்  - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment