5 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருத்தெளிச்சேரி

                                             - நாட்டமுற்ற
வாக்குந் தெளிச்சேரி மாதவர்க்கு இன்பநலம்
ஆக்கும் தெளிச்சேரி அங்கணனே -

வாக்குச்சுத்தம் உடையவர்கள் மாதவம் புரிந்தவர்கள் ஆவர். இத்தகைய பெருந்தவம் உடையவர்களுக்கு இன்பத்தையும் நன்மையையும் அளிக்கும் திருத்தெளிச்சேரி சிவனை
வணங்குவோம்.

இப்பகுதி கோயிற்பத்து எனவும் வழங்கப்படுகிறது. சோமவார வழிபாடு இங்கு சிறப்பு.

இறைவன் : பார்வதீஸ்வரர்
இறைவி   : சத்தியம்மை
தலமரம்    : வன்னி, வில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment