6 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருத்தருமபுரம்

                                         - நீக்கும்
கரும புரத்திற் கலவாது அருள்செய்
தரும புரம்செய் தவமே -

நாங்கள் செய்த தவப்பயனாய் திருத்தருமபுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே
விலக்குதற்குரிய தீவினைகள் எம்மோடு கலவாது காத்து அருள் புரிவீராக.

மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த குறை நீங்க எமன் வழிபட்டதலம்.
சம்பந்தர் யாழ்மூரிப் பதிகம் பாடிய தலம். யாழ்ப்பாணர் யாழில் அமைத்துப் பாட இயலாத
இசைப் பாடல் யாழ்மூரி.

இறைவன் - யாழ்மூரிநாதர்
இறைவி   -  தேன் அமுதவல்லி
தலமரம் - வாழை
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


No comments:

Post a Comment